Pages

Saturday 15 February 2014

தம்பதியினர் ஒற்றுமைக்கு மாசி மகம் விரதம்.


எல்லா மாதங்களிலும் 'மகம்' நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே 'மாசி மகம்'
என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் சொல்கின்றன. உலகத்தைப் படைப்பதற்காக உலகப் பொருட்கள் அனைத்தையும் ஒரு கும்பத்தில் வைத்தனர்.

அது நீரில் மிதந்து வரும் பொழுது, கும்பத்தை இறைவன் அம்பால் எய்ய அதன் மூக்குப் பகுதி அதாவது, முன்னால் இருக்கும் கூம்பு போன்ற கோணப் பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடமே 'கும்பகோணம்'
என்ற திருத்தலமாகப் பெயர் பெற்றது. 

இங்கு மகாமகம் விழா சிறப்பாக நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற வருடங்களில் வரும் மாசி மாதங்களில் 'மகம்' நட்சத்திரம் வரும் பொழுது நாம் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும். 

இது முருகப் பெருமானுக்கும்
உகந்த விரதமாகவும் கருதப்படுகிறது. அன்றைய தினம் தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் ஒற்றுமை,குழந்தைப்பேறு கிடைக்கும். அன்றைய தினம் சிவனை வழிபடுவதன் மூலம் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads