Pages

Saturday 15 February 2014

பழனி–திருச்செந்தூர் ரெயில் சேவை நாளை தொடக்கம்:

மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பழனி–திருச்செந்தூர் ரெயில் சேவை நாளை (16–ந்தேதி) முதல் தொடங்கப்படுகிறது. அறுபடை முருகன் கோவில்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும்.தொடக்க விழாவினை தொடர்ந்து 17–ந்தேதி முதல் ரெயில் போக்குவரத்து தினசரி நடைபெற உள்ளது.
நாளை காலை 10.30 மணிக்கு ரெயிலை பழனியில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதேபோல் திருச்செந்தூரில் இருந்தும் பழனிக்கு நாளை காலை 10.20 மணிக்கு ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது.
 இந்த ரெயில் பழனியில்
இருந்து தினமும் காலை 7.20 மணிக்கு புறப்படுகிறது. மதுரைக்கு காலை 10.15 மணிக்கு வந்து 5 நிமிடம் நிற்கிறது. 10.20 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு பகல் 2 மணிக்கு திருநெல்வேலிக்கும், 4 மணிக்கு திருச்செந்தூருக்கும் சென்றடைகிறது.


இதேபோல் திருச்செந்தூரில்
இருந்து தினமும் காலை 10 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது. திருநெல்வேலிக்கு 11.20 மணிக்கு வருகிறது. அங்கிருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை 4.10 மணிக்கு வருகிறது. 5 நிமிடங்கள் நின்று விட்டு 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 7.20 மணிக்கு பழனி சென்றடைகிறது.
மேற்கண்ட தகவலை மதுரை மண்டல ரெயில்வே மேலாளர் ஏ.கே.ரஸ்தோகி, முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads