மேஷம்:
தன்மானத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் உயிரென மதிக்கும் நீங்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பீர்கள். இலவசத்தை விரும்பமாட்டீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் இப்போது 6ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் உடன டியாக நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கிருந்த முன்கோபம், கூடாப் பழக்க வழக்கங்கள் வில கும். அத்தை, அம்மான், தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள்; சரி செய்வீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் நட்பு வட்டம் விரியும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் 27ந் தேதி முதல் ராசிக்கு 8ம் வீட்டில் நிற்கும் ராகுவுடன் சேர்வதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். சகோதரர்களுடன் மனத்தாங்கல் வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை வரக்கூடும். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். 7ம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி வீண் சந்தேகங்கள், வாக்குவாதங்கள் வரும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கும் உடல் நிலை பாதிக்கும். 2ம் வீட்டில் குரு நிற்பதால் எல்லா பிரச்னைகளையும் சமாளித்து முன்னேறுவீர்கள். வருமானமும் குறையாது.
கன்னிப் பெண்களே, தள்ளிப் போன திருமணம் கூடி வரும்.
வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கடையை விரிவுபடுத்துவீர்கள்.
உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். நீண்ட நெடுநாட்களாக தடைபட்டு வந்த பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருந்தாலும் மூத்த அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்.
கலைத்துறையினரே, எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
விவசாயிகளே, வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள். கிணற்றில் தண்ணீர் சுரக் கும். ஆரோக்யத்தில் அக்கறைக் காட்ட வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 17, 18, 19, 25, 26, 27 அக்டோபர் 5, 6, 8, 13, 14, 15.
சந்திராஷ்டம தினங்கள்:
செப்டம்பர் 20ந் தேதி மாலை 4 மணி முதல் 21, 22ந் தேதி மாலை 6:30 மணி வரை எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்.
பரிகாரம்:
காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள திருமாகறல் எனும் தலத்தில் அருளும் உடும்பீசரை வணங்குங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.
ரிஷபம்:
ரிஷபம்: மதியாதார் தலைவாசல் மிதிக்காத நீங்கள், யாருக்காகவும் சுய கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான புதன் 26ந் தேதிவரை வலுவாக இருப்பதால் நிம்மதி, பணவரவு கிட்டும்; எதிர்ப்புகள் நீங்கும். 27ந் தேதி முதல் 6ம் வீட்டில் மறைவதால் மனஉளைச்சல் இருக்கும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், கருத்து மோதல்கள் வரக்கூடும். சளித் தொந்தரவு, பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை வந்து போகும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து போகும்.
6ம் வீட்டில் மறைந்து கொண்டு அவ்வப்போது பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் செவ்வாய் 27ந் தேதி முதல் ஆட்சி பெற்று 7ம் வீட்டில் அமர்வதால் பூமி சம்பந்தப்பட்ட சிக்கல்கள், சொத்துப் பிரச்னைகள், பாகப் பிரிவினைகள் சாதகமாக முடியும். மனைவிக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சை செய்வதன் மூலமாக நீண்ட நாள் நோய் விலகும். ஆனால் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்தாலும் ராகுவுடன் சேர்வதால் சகோதர வகையில் மனக்கசப்புகள் தொடரும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். சூரியன் 5ம் வீட்டில் நுழைந்திருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்து போகும்.
கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 28ந் தேதி முதல் 4ம் வீட்டில் அமர்வதால் வாகனப் பழுது நீங்கும். பாதியிலேயே நின்று போன வீடு கட்டும் பணி முழுமையடையும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்கள் ராசிக்கு யோகாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்று 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வழக்கு சாதகமாக முடியும்.
அரசியல்வாதிகளே, வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.
வியாபாரிகளே, சந்தை நுணுக்கங்களை தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள். வேலையாட்களிடம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். ஏற்றுமதி, இறக்குமதி, கமிஷன் மூலம் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். தொல்லைக் கொடுத்து வந்த மூத்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களின் ஆதரவு பெருகும்.
கலைத்துறையினரே, உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலும் அஞ்ச வேண்டாம்.
விவசாயிகளே, நவீனரக உரங்களை கையாளுவதால் விளைச்சலில் இருந்து வந்த மந்த நிலை மாறும். ஆழமறிந்து காலை விட வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்:செப்டம்பர் 19, 21, 25, 26, 27, 28, 30 அக்டோபர் 1, 3, 7, 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
செப்டம்பர் 22ந் தேதி மாலை 6:30 மணி முதல் 23, 24 தேதிகளில் எதிலும் பொறுமை காப்பது நல்லது.
பரிகாரம்:
நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள கீழையூர் கீழரங்கனை தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு கம்பளிப்போர்வை வாங்கிக் கொடுங்கள்.
மிதுனம்:
மிதுனம்: நினைத்ததை சாதித்துக் காட்டும் மன உறுதியும் விடாமுயற்சியும் உடைய நீங்கள், எப்பொழுதும் எளிய வாழ்க்கையை விரும்புவீர்கள். உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நின்றுகொண்டு அடிக்கடி கூச்சல், குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் செவ்வாய் 27ந் தேதி முதல் 6ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் மனஇறுக்கம் நீங்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஷேர் மூலமாக பணம் வரும். சகோதரர்கள் உங்கள் நல்ல மனதைப் புரிந்து கொள்வார். சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். குருபகவான் 12ல் நிற்பதால் கொஞ்சம் சிக்கனமாக இருக்கப் பாருங்கள்.
உங்கள் பூர்வ புண்யாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் வாகன வசதி பெருகும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் ராசிநாதன் புதன் சென்றுகொண்டிருப்பதால் தைரியம் பிறக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். அழகு, இளமை கூடும். உற்சாகமாக காணப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சூரியன் 4ல் அமர்ந்திருப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ராகு வலுவாக இருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வேற்றுமதம், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடிவரும்.
அரசியல்வாதிகளே, கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.
கன்னிப் பெண்களே, உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்னைகளும் கட்டுப்பாட்டிற்குள் வரும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். மருந்து, துணி, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
கலைத்துறையினரே, உங்களின் கற்பனைத் திறன் வளரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.
விவசாயிகளே, தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 17, 21, 22, 23, 24, 30 அக்டோபர் 1, 2, 3, 5, 10, 11, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
செப்டம்பர் 25, 26 ஆகிய தினங்களில் எதிலும் அலட்சியம் காட்டாதீர்கள்.
பரிகாரம்:
நெல்லைக்கு அருகேயுள்ள சீவலப்பேரியில் அருளும் துர்க்கையை வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
கடகம்:
கடகம்: நிறை குறைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்களை துல்லியமாக கணிக்கும் நீங்கள் பிறரின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டிலேயே கடந்த ஒரு மாதமாக அமர்ந்துகொண்டு ஓரளவு பணவரவையும் பேச்சால் சின்ன சின்ன பிரச்னைகளையும் ஏற்படுத்தி வந்த சூரியன் ராசிக்கு 3ம் வீட்டில் வந்து அமர்ந்ததால் தடைப்பட்ட காரியங்கள் முடியும். கண் கோளாறு, பல் வலியிலிருந்து விடுபடுவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். சோர்வு நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதுவாக இருந்தாலும் நீங்களே நேரில் சென்று எல்லா வேலைகளையும் செய்து முடிப்பது நல்லது.
இடைத்தரகர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அரசாங்கத்தால் கௌரவம் உண்டு. வழக்குகள் எதிர்பார்த்ததை விட நல்ல விதத்தில் முடியும். உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான செவ்வாய், 27ந் தேதி முதல் 5ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த வரனும் மகளுக்கு அமையும். சகோதரர்கள் உங்களுடன் விட்டுக் கொடுத்துப் போவார்கள். மனதிலே ஒரு தெளிவு பிறக்கும்.
என்றாலும் 5ம் வீட்டிலேயே ராகுவும் தொடர்வதால் சில நேரங்களில் கோபப்படுவீர்கள். சிலர் ஏன் இப்படி எல்லாம் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று வேதனைப்படுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய இனிமையான அனுபவங்கள் நினைவுக்கு வரும். படைப்புத் திறன் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோசித புத்தியுடன் பேசுவீர்கள். சனிபகவான் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. மனைவிக்கு வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாயாருடன் சின்ன சின்ன மனத்தாங்கல் வரும். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் லாப வீட்டில் நிற்பதால் வராது என்றிருந்த பணம் வரும்.
வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். குறைந்த சதவீத லாபம் வைத்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். ரசாயன வகைகள், கட்டட உதிரி பாகங்கள், பருப்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
விவசாயிகளே, உங்கள் கடன் தள்ளுபடியாகும். புதிய சலுகைகளும் கிடைக்கும். விளைச்சல் இரட்டிப்பாகும். கௌரவம் கம்பீரம் கூடும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 17, 18, 19, 20, 23, 24, 26. அக்டோபர் 2, 3, 4, 5, 12, 13, 14, 15.
சந்திராஷ்டம தினங்கள்:
செப்டம்பர் 27, 28 ஆகிய நாட்களில் யாரையும் விமர்சித்து பேசாதீர்கள்.
பரிகாரம்:
பழநி முருகனை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.
சிம்மம்:
அரைக்காசுக்கு போன மானம் ஒரு கோடி கொடுத்தாலும் திரும்ப வராது என்பதை அறிந்த நீங்கள் தன்மானச் சிங்கங்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் பிரச்னைகளை எப்படி தீர்க்கலாம் என்று யோசிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வாகனத்தை மாற்றுவது, சீர் செய்வது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 28ந் தேதி முதல் சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நுழைவதால் உங்களின் செல்வாக்கு ஒருபடி உயரும். குழப்பங்கள் நீங்கும். இப்போது ஏழரைச் சனியிலிருந்து முழுமையாக விடுபட்டதால் இனி தடையில்லாமல் முன்னேறுவீர்கள். இனி முக்கியமான முடிவுகளெல்லாம் தன்னிச்சையாக எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவீர்கள்.
தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய், 27ந் தேதி முதல் 4ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் தாயாரின் உடல் நிலை சரியாகும். அவருடன் இருந்து வந்து மனத்தாங்கல் நீங்கும். முதுகு மற்றும் மூட்டு வலியிலிருந்து விடுபடுவீர்கள். என்றாலும் ராகுவுடன் இணைவதால் பெற்றோருடன் கருத்து மோதல்கள் வரும். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்படி செயல்படுங்கள். முன்கோபத்தை தவிர்க்கப் பாருங்கள்.
பூர்வ புண்யாதிபதியான குருபகவான் ராசிக்கு 10ம் வீட்டில் நிற்பதால் சில நேரங்களில் அலுப்பு, சலிப்பு வரும். பெயரும், புகழும் கெட்டுவிடுமோ என்ற பயம் ஏற்படும். பெரிய நோய் தாக்கிவிடுமோ என்ற அச்சம் வரும். புதன் சாதகமாக இருப்பதால் செலவுக்கு பணம் வரும். உங்கள் ராசிநாதன் சூரியன் ராசியை விட்டு விலகி 2ல் அமர்வதால் கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி, பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும்.
அரசியல்வாதிகளே, வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டிவரும்.
கன்னிப் பெண்களே, சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.
மாணவர்களே, மந்தம், மறதியிலிருந்து விடுபடுவீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். இரும்பு, ஸ்பெகுலேஷன், கடல் உணவு வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகள் சில முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சக ஊழியர்களால் மறைமுக எதிர்ப்புகளும் தொந்தரவுகளும் இருக்கும்.
கலைத்துறையினரே, உங்களின் படைப்புகளுக்கு பாராட்டு கிடைக்கும்.
விவசாயிகளே, மரப்பயிர்களால் வருமானம் பெருகும். இயற்கை உரத்தை மறந்து விடாதீர்கள். மனப்போராட்டம் நீங்கி மகிழ்ச்சி பெருகும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 17, 18, 19, 20, 25, 26, 27 அக்டோபர் 5, 6, 7, 8, 14, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1ந் தேதி மாலை 6 மணி வரை எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள்.
பரிகாரம்:
காஞ்சிபுரம், உத்திரமேரூருக்கு அருகே உள்ள திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரரையும் குரு பகவானையும் வணங்குங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியரை வணங்குங்கள்.
கன்னி:
கன்னி: அன்றாட வாழ்வில் ஏற்படும் நெளிவு, சுளிவுகளுக்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுத்து வாழக் கற்று கொண்ட நீங்கள், எப்பொழுதும் புதுமையை விரும்புவீர்கள். உங்கள் ராசியிலேயே நின்று கொண்டிருந்த சனிபகவான் இப்போது ராசியை விட்டு விலகி 2ம் வீட்டில் நுழைந்திருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கும். இருந்தாலும் ஏழரைச் சனியின் கடைசி பகுதியாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்திருந்த சூரியன் இப்போது உங்கள் ராசிக்குள் நுழைந்திருப்பதால் படபடப்பு, முன்கோபம் வரும். அவசரப்பட்டு பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.
ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுக்க வலுவான வீடுகளில் செல்வதால் உற்சாகம் பொங்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் உதவுவார்கள். நல்ல மருத்துவர் அறிமுகமாவார். நோயின் தாக்கம் குறையும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வருமானம் வரும். 28ந் தேதி முதல் சுக்கிரன் 12ம் வீட்டில் நுழைவதால் செலவுகள் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ராகு சாதகமாக இருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.
2ம் வீட்டிலேயே நின்று சேமிப்புகளை கரைத்து, உங்களை கடுமையாக பேச வைக்கும் செவ்வாய், 27ந் தேதி முதல் 3ம் வீட்டில் நுழைவதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க உதவிகள் கிடைக்கும். ஏழரைச் சனியாலும், ராசிக்குள் நிற்கும் சூரியனாலும் பிரச்னைகள் ஏற்பட்டாலும் குருபகவான் 9ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகளே, தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள்.
மாணவர்களே, விளையாட்டு, கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள்.
வியாபாரத்தில் கடன் வாங்கி கடையை விரிவுபடுத்துவீர்கள். மரவகைகள், ரியல் எஸ்டேட், டிராவல்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் உங்களின் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள்.
கலைத்துறையினரே, கௌரவிக்கப்படுவீர்கள். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
விவசாயிகளே, பூச்சி, எலித் தொல்லை குறையும். மீதிப்பணம் தந்து பக்கத்து நிலத்தை கிரயம் செய்வீர்கள். அனுபவ அறிவால் முன்னேறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 19, 20, 21, 22, 23, 24, 27, 28, 30 அக்டோபர் 7, 8, 9, 10.
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 1ந் தேதி மாலை 6 மணி முதல் 2, 3 தேதிகளில் யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள்.
பரிகாரம்:
கடலூர்-சிதம்பரம் சாலையில் திருச்சோபுரம் தலத்தில் அருளும் சோபுரநாதரை தரிசியுங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.
Key word:மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி- புரட்டாசி மாத ராசிபலன்கள்
No comments:
Post a Comment