Pages

Saturday 15 February 2014

கண்நோய் தீர்க்கும் தலம்.

காஞ்சீபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில்
 முருங்கை மரத்தின் நிழலில் ஜோதி லிங்கமாக எழுந்தருளி இருக்கும் கச்சபேஸ்வரரை சூரியன் தேவ வடிவாக வழிபட்டதாக கூறப்படுகிறது. 

இங்கு சூரிய தேவன் ஒரு தீர்த்தம் (குளம்) அமைத்து பெருமானுடன் இஷ்டசித்தீஸ்வரர், ஞான சித்தீஸ்வரர், யோக சித்தீஸ்வரர், தர்ம சித்தீஸ்வரர் மற்றும் வேத சித்தீஸ்வரர் ஆகிய லிங்கங்களை எழுந்தருள செய்து வழிபட்டுப் பேறு பெற்றதாக காஞ்சீபுரம் தல புராணம் கூறுகிறது. 

இந்தக் கோவிலில் சூரியன், விருச்சிக ராசியில் ஆட்சி பெற்று விளங்கும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய உதயத்தில் நீராடி ஜோதிர் லிங்கத்தை வழிபட்டு சூரியனையும் வழிபடுவோர் நோய் நொடியின்றி வாழ்வர் என்பது ஐதீகம். குறிப்பாக கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். 

ஒருமுறை ‘மயூரசர்மன்’ என்ற கவுடதேச மன்னன் விதி வசத்தால் தன் இரு கண்களையும் இழக்க நேரிட்டது. இந்த தலத்து மகிமை அறிந்து இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி மீண்டும் அவன் பார்வை பெற்றதாக புராணம் கூறுகின்றது. 

வடமொழியில், புலமை பெற்ற அவன், கண்பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் சூரியனை துதித்து இயற்றிய நூல் தான் ‘சூரியசதகம்’ ஆகும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads