Pages

Friday, 30 November 2012

தங்கம் சேமிப்பு.


மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும், தன் எதிர்கால வாழ்க்கைக்காக நமது வருமானத்தில் சிறிதளாவது சேமித்தே தீர வேண்டும். அதை எவ்வாறு சேமிப்பது, என்பதில் பல முரண்பாடுகள்.

முன்பெல்லாம் சேமிப்பது என்றால், தபால் அலுவலகத்திலேயோ அல்லது வங்கியில் சேமிப்பு கணக்கு திறப்பதிலேதான் இருந்தது. பின்னர் மாத சீட்டுகளும், தனியார் பைனான்சுகளும் சிறிது காலம் ஆக்கிரமிப்பு செய்தது.  வங்கியில் அல்லது தபால் நிலையத்தில் சேமிக்கும் பணத்திற்கு ஆபத்தில்லை
என்றாலும் அதில் கிடைக்கும் வட்டி மிகவும் சொற்பமானது, அது போல சீட்டு மற்றும் தனியார் பைனாஸ்கள் முதலுக்கே மோசமாகக் கூடிய அபாய சேமிப்பு. பின்னர் எதில்தான் பாதுகாப்பாகவும், நல்ல வருவாய் கிடைக்கும்படியாகவும் சேமிப்பது. அதற்கு ஒரே வழி தங்கம் அல்லது வெள்ளியில் முதலீடு செய்வதுதான்.

தங்கத்தை சேமிப்பது பலவகையாக இருக்கின்றது. நகைகளாக வாங்கி சேமிப்பது, வங்கியில் அல்லது தபால் நிலையத்தில் தங்கக்காசுகளாக வாங்குவது என பல வகைப்படும். ஆனால் அதிலும் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தங்கத்தை நகைகளாக வாங்கினால் கடைக்காரர்கள் செய்கூலி,சேதாரம்,வரி என பல்வகை காரணங்களை கூறி நம்மிடம் பணத்தை கறந்துவிடுவார்கள். அதுபோல அந்த நகைகளை விற்கச்செல்லும்போதும் சேதாரத்தை கழித்துதான் நமக்கு பணம் கொடுப்பார்கள். மேலும் சந்தை விலைக்கு விற்க முடியாது. பழைய நகைக்கு என ஒரு விலை வைத்திருப்பார்கள். அந்த விலையைத்தான் நமக்கு கொடுப்பார்கள். மேலும் நகைகளை வாங்கினால் மட்டும் போதாது, அவற்றை பாதுகாப்பது அதைவிட பெரிய கஷ்டமான காரியம். வீட்டில் என்னதான் பீரோவில் பூட்டி வைத்தாலும், திருடன் சர்வசாதாரணமாக புகுந்து, நகைகளை கொள்ளையடித்துவிட்டு, வீட்டில் உள்ள சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு, ஆற அமர செல்வதை பத்திரிகைகளில் படிக்கின்றோம்.
வங்கிகளில் அல்லது தபால் அலுவலகங்களில் தங்கக்காசுகள் வாங்கினால், அதன் விலை மிகவும் அதிகமானதாக இருக்கும். 24 காரட் தங்கம் மட்டுமே வாங்க முடியும். அதற்கு அவர்கள் விதிக்கும் வரியும் அதிகமாக இருக்கும். மேலும் அந்த தங்கக்காசுகளை ஒரு அவசரத்திற்கு எந்த வங்கியிலும் அடகு வைக்கமுடியாது. அவர்களே திரும்பவும் விலைக்கு வாங்கவும் மாட்டார்கள்.
இதற்கு சரியான வழி ஆன்லைனில் தங்கம் வாங்கி சேமிப்பதுதான். அதாவது தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், உடனே ஒரு டிமேட் கணக்கு ஒன்றை தரகர் அல்லது தரகு நிறுவங்களில் ஒன்றில் திறக்கவேண்டும். அதற்கு வெறும் ரூ.500 மட்டுமே செலவாகும். சில நிறுவங்கள் அதிகமாக முதலீடு செய்தால்,  இலவசமாகவே கணக்கு திறந்து கொடுக்கினொ

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads