யோகாசனம் மனதிற்கும் உடலிற்கும் ஏற்றது.
நோய்களில் இருந்து உடலை பாதுகாப்பதோடு நோய் ஏற்படாமலும் தடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு யோகாசனம் சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பிரசவ கால சிக்கல்களை
தீர்க்க உதவுவதோடு,
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும், உடல் வலிகளையும் நீக்குகிறது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்களில் சாதாரணமாக யோகாசனம் செய்யலாம். அதன் பிறகு குருவின் ஆலோசனைப்படி கர்ப்பிணிகளுக்கு என்று பிரத்யேகமான உள்ள ஆசனங்களை செய்யலாம் என்கின்றனர் மருத்துவர்கள் தடாசனம் பக்தகோணாசனம், வஜ்ராசனம், நமஸ்காராசனம், ஆனந்த சயனாசம், மகாமுத்திரா பாலாசனம், சவாசனம் போன்றவை கர்ப்பிணிகளுக்கு சிறந்த ஆசனங்கள்.
No comments:
Post a Comment