Pages

Monday, 16 July 2012

கர்ப்பிணிகள்-யோகா


யோகாசனம் மனதிற்கும் உடலிற்கும் ஏற்றது.

நோய்களில் இருந்து உடலை பாதுகாப்பதோடு நோய் ஏற்படாமலும் தடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு யோகாசனம் சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பிரசவ கால சிக்கல்களை
 தீர்க்க உதவுவதோடு,
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும், உடல் வலிகளையும் நீக்குகிறது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்களில் சாதாரணமாக யோகாசனம் செய்யலாம். அதன் பிறகு குருவின் ஆலோசனைப்படி கர்ப்பிணிகளுக்கு என்று பிரத்யேகமான உள்ள ஆசனங்களை செய்யலாம் என்கின்றனர் மருத்துவர்கள் தடாசனம் பக்தகோணாசனம், வஜ்ராசனம், நமஸ்காராசனம், ஆனந்த சயனாசம், மகாமுத்திரா பாலாசனம், சவாசனம் போன்றவை கர்ப்பிணிகளுக்கு சிறந்த ஆசனங்கள்.
கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு மகாமுத்திரா மிகவும் நல்லது. ஜீரண சக்தி அதிகரிக்கும். இடுப்பு தசைகள், நரம்புகள் வலிமை பெறும். இதனால் குழந்தை பிறப்பு சுலபமாகும். கர்ப்பிணி பெண்கள் யோகாசனங்கள் செய்வது மிகவும் நல்லது. இதனால் கருவுக்கும் நன்மை ஏற்படும். ஆசனங்கள் கர்ப்பிணிப் பெண்களின் இரத்த ஒட்டத்தை அதிகரித்து, முதுகெலும்புக்கு இரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். தவிர உடலின் கீழ் பாகங்களுக்கு ரத்த ஒட்டம் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads