பழமொழியை அனுபவத்தின் குழந்தைகள் என்று சொல்வார்கள்.ஆகையால்பழமொழியை பிழைமொழி என்று சொல்லிப் புறங்கையால் ஒதுக்கிவிடமுடியாது.தமிழ் இலக்கியத்தில் பழமொழியானது , முதுசொல், முதுமொழி,பழஞ்சொல்,மூதுரைஎன்று பலவாறாக குறிக்கப்படுகிறது.தொல்காப்பியத்தில் பழமொழிக்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பழமொழிகள்:
- அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
- அகல உழுகிறதை விட ஆழ உழு.
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
- அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
- அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
- அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
- அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
- அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
- அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
- அடக்கமே பெண்ணுக்கு அழகு.
- அடாது செய்தவன் படாது படுவான்.
- அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
- அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
- அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
- அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
- அந்தி மழை அழுதாலும் விடாது.
- அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
- அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
- அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
- அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
- அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
- அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
- அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
- அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
- அழுகிற பிள்ளை பால் குடிக்கும்.
- அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
- அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
- அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
- அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
- ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்.
- ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
- ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு,
- ஆலயம் தொழுவது சாலமும் நன்று.
- தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
- ஆள் பாதி, ஆடை பாதி.
- ஆழம் தெரியாமல் காலை விடாதே.
- ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
- ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
- ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
- ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.
- ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
- ஆனைக்கும் அடிசறுக்கும்.
- ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
- ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
- ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
- ஆனை பசிக்கு சோளப் பொரி.
- ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.
- இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான்,
- தென்னையை வைத்தவன் தின்று விட்டு சாவான், பனையை வைத்தவன் பார்த்துக்கொண்டே சாவான்.
No comments:
Post a Comment