Pages

Sunday, 10 June 2012

சென்னையில் விரைவில் அரசு கேபிள் டி.வி.- 500 சேனல்களை பார்க்கலாம்

 சென்னையில் விரைவில் அரசு கேபிள் டி.வி.- 500 சேனல்களை பார்க்கலாம்.

அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் விவேகானந்தன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
சென்னையில் அதிநவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் அரசு கேபிள் டி.வி. விரைவில் செயல்பட உள்ளது. இதற்கான செட்ஆப் பாக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உலக அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
வருகிற 20-ந்தேதி டெண்டர் திறக்கப்பட்டு உரிமம் வழங்கப்படும். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மொத்தம் 3 வகையான செட்ஆப் பாக்ஸ் விற்பனை செய்யப்படும். இதில் விருப்ப சேனல்கள் உள்பட 500 சேனல்களை பார்க்க முடியும். இதில் எச்.டி. எனப்படும் உயர்தொழில் நுட்பம் கொண்ட 20 சேனல்களும் அடங்கும்.
சென்னைக்கு முதல் கட்டமாக 20 லட்சம் செட்ஆப் பாக்ஸ் தேவைப்படும். இவற்றை மிகவும் தரமானதாக தயாரித்து வழங்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 5 வருடமாவது உழைக்கும் வகையில் செட்ஆப் பாக்ஸ் கருவிகள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளோம்.
செட்ஆப் பாக்ஸ் வழங்க டெண்டர் போட்டுள்ளதால் ஜூலை 1-ந்தேதி முதல் கேபிள் ஒளிபரப்பில் செட்ஆப் பாக்ஸ் கட்டாயம் என்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை நகரில் செட்ஆப் பாக்ஸ் வழங்குவதற்காக வீடுதோறும் கேபிள் ஆபரேட்டர்கள் ரூ.500 டெபாசிட் வசூலித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads