
குங்குமத்தில் கூட இன்று கலப்படம் வந்துவிட்டதால் நாமே நமது குலதெய்வம் அல்லது கோயில்களுக்கு குங்குமம் செய்துதரலாமே!புண்ணியம் செய்தபலன் கிடைக்கும்.நம்மால் தயாரிக்கப்பட்ட குங்குமம் நமது பகுதி மக்கள் பயன்படுத்தின பெருமை நமக்கு கிடைக்கலாம்!
- ஒரு வெள்ளிக்கிழமை குங்குமம் செய்யத் துவங்குவது நல்லது.
- சுபநாட்களில் துவங்குவது நன்று.
- தேய்பிறைநாட்களில் துவங்கக் கூடாது.
- பெண்கள் மடிசார் கட்டியும், ஆண்கள் பஞ்சகச்சம் அணிந்து தயாரிப்பது நலம்.
- புள்ளிகள் மற்றும் பூச்சிகள்தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
- கொடி எலுமிச்சை மிகவும் நன்று.
- எலுமிச்சையை துர்க்கைகாயத்ரி மந்திரம் சொல்லிக்கொண்டு கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.
- நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும்.
- எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்கக்கூடாது.
- பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது.
- வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்கவேண்டும்.
- நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாகசேர்க்க வேண்டும்.
- இக்கலவையினை நிழலில் காய வைக்கவேண்டும். இதுவே குங்குமப்பொடி.
- இதனைத் தயாரிக்கும்போது லலிதா சகஸ்ரநாமம் அல்லது தேவிமகாத்மியத்திலுள்ள துர்க்காஸ்ப்தசதி ஸ்லோகங்களைப் படித்துக் கொண்டே செய்யவேண்டும்.
- குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள்.மாங்கல்ய பலத்தை அதிகரிப்பதே குங்குமத்தின் பொருள்.
- அம்பாளின் பரிபூரண அருளைப் பெறுவதற்காக ஆண்கள் குங்குமத்தை அணிந்து கொண்டு அம்பாளை குங்குமத்தால் அர்ச்சித்து பரிபூரணப்பலன்களைப் பெறுகின்றனர்.
இதை ஹயக்ரீவப் பெருமாள் அகத்தியருக்கு உபதேசித்தார்.
சுபநாட்களில் கோவில்களிலும்,வீடுகளிலும் குங்குமதானம் செய்பவர்கள் மாங்கல்யப் பிராப்தி அடைகிறார்கள்.திருமணத்தடை விலகும்.
சுபநாட்களில் கோவில்களிலும்,வீடுகளிலும் குங்குமதானம் செய்பவர்கள் மாங்கல்யப் பிராப்தி அடைகிறார்கள்.திருமணத்தடை விலகும்.
No comments:
Post a Comment