Pages

Friday, 20 April 2012

பூண்டு சாதம்


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்-குறள்
 
     

தேவையானப்பொருட்கள்:
  • சாதம் - 2 கப் (இருவருக்கு தேவையான அளவு)
  • பூண்டு பற்கள் (சிறிய அளவு) - 10 முதல் 15 வரை காய்ந்த மிளகாய் - 2
  • தனியா - 1 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • எண்ணை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
  • கடுகு - 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
  • வெள்ளரிக்காய்   பச்சடி.
செய்முறை:
ஒரு சிறு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். கடைசியில் 4 அல்லது 4 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும். ஆறிய பின், வறுத்த அனைத்தையும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
        ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு அதில் மீதமுள்ள பூண்டுப்பற்களைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.  அதே எண்ணையில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.  அடுப்பை தணித்து வைத்துக் கொண்டு, சாதம் மற்றும் பொடித்து வைத்துள்ளப் பொடி, உப்பு  ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும்.  கடைசியில் வதக்கி வைத்துள்ளப் பூண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
வெள்ளரிக்காய் பச்சடியுடன் பரிமாறவும்.
கவனிக்க: எண்ணைக்கு பதில் சிறிது நெய்யிலும் பூண்டை வதக்கி போடலாம். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பிற்குப் பதிலாக, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றைப் பொடித்தும் சேர்க்கலாம். பொட்டுக்கடலை/வேர்க்கடலை சேர்ப்பதென்றால் வறுக்கத் தேவையில்லை.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads