Pages

Friday, 10 August 2012

ஞான முத்திரை-தூக்கமின்மையை நீக்கும்



செய்முறை:
 கட்டை விரலின் நுனியானது( ஆட்காட்டி)சுட்டு விரலைத் தொடுமாறு மற்றைய விரல்கள் நீட்டப்பட்டும் அமையத் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் உட்கார்ந்து கொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ செய்யலாம். பெருவிரல் நெருப்பையும் , சுட்டுவிரல் காற்றையும் குறிப்பாதால் இவை இரண்டும் இணைந்து மனதில் உள்ள தீய சிந்தனைகளை அகற்றி ஞான நிலைக்கு இட்டுச் செல்லும்.
 மேலும் மனம் ஒருமுகப்படுவதுடன், கோபம் பிடிவாதம் பொறுமையின்மை போன்றவை மறையும். எதனையும் இலகுவாக கற்றுக்கொள்ளும் தன்மை அதிகரிக்கும். எந்தவொரு அமைதியான இடத்திலும் செய்யலாம்.. இந்த முத்திரை செய்ய குறிப்பிடும்படியாக நேர அவகாசம் தேவையில்லை, எந்த நேரத்திலும் இதனைச் செய்யலாம்.
 பலன்கள்:
விரல்கள் அமுக்கப்படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன. ஆகவே இந்த முத்திரை, ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும். கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும். ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும்.
Key word:ஞான முத்திரை மூளையைக் கூர்மையாக்கும்,தூக்கமின்மையை நீக்கும்,மனம் சாந்தமடையும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads